Site icon Tamil News

வடக்கு நைஜீரியாவில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் : 37 பேர் பலி!

வடக்கு நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்  கிழமைகளில் யோபே மாநிலத்தின் கெய்டாம் மாவட்டத்தில் கிராம மக்களை குறிவைத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களை அடக்கம் செய்ய சென்றப்போது கண்ணிவெடியை வெடிக்கச் செய்து மற்றுமோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version