ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து புறப்பட தயாரான விமானத்தில் பதற்றம் : பணியாளரை தாக்கி வெளியே குதித்த பயணி!

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது பணியாளர்களைத் தாக்கி அவசர வழியை திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள பாரிஸ் ஓர்லி விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பராஜாஸ் விமான நிலையத்திற்கு விமானம் புறப்படவிருந்த விமானத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

அவசர உதவியாளர்கள் பயணியைத் தடுத்து நிறுத்த விரைந்தனர். இருப்பினும் அவர் விமானத்திலிருந்து 11.5 அடி உயரத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விமானத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள், அவசர வாகனம் ஒன்று தார் சாலையில் வந்து சேர்ந்ததைக் காட்டுகின்றன.

நிலைமையின் தீவிரம் இருந்தபோதிலும், விமானம் அன்று மாலையில் மாட்ரிட்டுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணி விமானத்திலிருந்து குதித்ததற்கான காரணம் என்ன, அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்