ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களால் பதின்மவயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு அதிகளவில் இலக்காகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பு தெருக்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் தற்போது பாடசாலைகளுக்குள் இடம்பெற்று வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டேனியல் அன்ஜோரின், 14, ஏப்ரல் 30 அன்று கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட்டில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டார்.

அதேபோல் கடந்த வாரம் ஷெஃபீல்டில் உள்ள ஒரு பள்ளியில் ‘உடைந்த பாட்டிலால் தாக்கப்பட்டு குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

வெல்ஷ் பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு பலியாகினர். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மக்களை பீதியில் உறையவைத்துள்ளன.

மார்ச் 2023 வரையிலான ஆண்டில் 25 வயதிற்குட்பட்ட 78 இளைஞர்கள் கத்தி அல்லது கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தகவலின் படி பதின்மவயதினர் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் “வன்முறையின் உண்மைகள் மற்றும் மாற்று வழிகளைப் பற்றி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கற்பிக்காத வரையில் கத்திக் குற்றங்கள் அதிகரிக்கும் என விளக்குகின்றனர்.

 

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!