இன்றைய முக்கிய செய்திகள்

மூன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: சில விமானங்கள் இரத்து!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு விமானமும் அதன் விமான பயணத்தை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுகிறது என்று அதிகாரி விளக்கினார்.

சில விமானங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த செயல்முறை நேரம் எடுக்கும். பாதிக்கப்பட்ட மூன்று விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன, என்றார்.

இதன் காரணமாக இன்று பிற்பகல் இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் சென்னையில் இருந்து இரவு 10:15 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த UL-124 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் அளித்துள்ளதுடன், அவர்கள் இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

TJenitha

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன
error: Content is protected !!