இலங்கை

தமிழர்களை இனியும் ஏமாற்ற முடியாது! அரசாங்கத்திற்கு சந்திரிகா கூறும் அறிவுரை!

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது.”

இவ்வாறு, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முயற்சித்தால் அதற்கு பூரண ஆதரவை தருவதற்கு தயார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்த கலந்துரையாடல் தோல்வியிலேயே முடிவடையும்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்கட்சிகளை இனியும் ஏமாற்ற முடியாது, சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தில் அவதானமாக உள்ளார்கள்.” என சந்திரிகா கூறியுள்ளார்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!