இலங்கை

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை – சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான தொடர்ந்த தமிழக அரசு குரல்கொடுக்கும் என இதன்போது மு.க.ஸ்டாலின் தமிழ்த் தேசிய பேரவையிடம் உறுதியளித்துள்ளார்.

இதன்போது கோரிக்கை கடிதமொன்று தமிழ்த் தேசிய பேரவையினரால் மு.க.ஸ்டாலினிடம் கையளிக்கப்பட்டது.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!