இலங்கை

தமிழ்நாடு தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் – இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் மார்சில்

மார்ச் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடப்பதற்குரிய சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“தேசிய மக்கள் சக்திமீது இந்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். ஆனால் அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் நடக்கவுள்ளது. தேர்தல் களத்தில் இலங்கை விவகாரமும் எதிரொலிக்கும். எனவே, இங்கு மாகாணசபைத் தேர்தல் நடப்பதற்கு அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்,” எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

(Visited 4 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்