இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமனம்

டகாஃபுமி கடொனோ ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக கடமையாற்றிய சென் சென்னின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டகாஃபுமி கடொனோ, ‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான ஒத்துழைப்பை வழங்கும். அதேவேளை, அந்த ஒத்துழைப்புகளினால் இலங்கை மக்கள் பயனடைவார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும்.

2006ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைந்துகொண்ட டகாஃபுமி கடொனோ மேற்கு, தென்கிழக்காசியா மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்