ஆசியா

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் அழைப்பு விடுத்த தைவானிய அதிபர்

தைவானிய அதிபர் லாய் சிங்-தே,சீனாவுடன் பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தைவானுக்கு அருகே இரண்டு நாள் போர்ப் பயிற்சியைச் சீனா நிறைவுசெய்த பிறகு அவர் அவ்வாறு கூறியுள்ளார்.இரு தரப்புக்குமிடையே புரிதலை மேம்படுத்தவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து மீண்டும் நட்புறவை ஏற்படுத்தவும் விரும்புவதாகத் லாய் தெரிவித்தார்.

தைவானைத் தனது அங்கம் என்று கூறும் சீனா, மே 23, 24ஆம் திகதிகளில் போர்ப் பயிற்சியை நடத்தியது.

லாய் பிரிவினைவாதி என்று சீனா தொடர்ந்து சாடிவரும் வேளையில், தைவானைச் சொந்தம் கொண்டாடும் பெய்ஜிங்கின் கருத்தை அவர் நிராகரித்தார்.மேலும் தைவானிய மக்கள்தான் தங்களின் வருங்காலம் குறித்து முடிவெடுக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் போர்ப் பயிற்சி குறித்துக் கவலை தெரிவித்ததற்காக அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் லாய் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வட்டார நிலைத்தன்மையைப் பாதிக்கும் விதமாகத் தைவானிய நீரிணையில் எந்தவொரு நாடும் சலசலப்பு ஏற்படுத்துவதை அனைத்துலகச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றார் அவர். சீனாவின் அண்மைப் போர்ப் பயிற்சிக்குத் தைவானிய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!