இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார், வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எனினும், வழக்கு விசாரணைக்காக […]

உலகம் செய்தி

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

  • February 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதிக்கு Isaac Herzog இணையவழிமூலம் கொலை மிரட்டல் விடுத்தார் online death threat எனக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நியூடவுனைச் Newtown பகுதியைச் சேர்ந்த டார்சி டின்னிங் Darcy Tinning என்பவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் AFP அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வரும் சர்வதேச பிரமுகருக்கு, தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார் என […]

இலங்கை செய்தி

“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”

  • February 3, 2026
  • 0 Comments

“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், FCID விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு […]

இலங்கை செய்தி

ஷிரந்தியுடன் FCID வந்த மஹிந்த: CID சென்றார் நாமல்!

  • February 3, 2026
  • 0 Comments

“ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு NPP அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார். அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். FCID வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் […]

இந்தியா

கருப்பு பெட்டி மீட்பு: விசாரணை தீவிரம்!

  • January 30, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. மேற்படி விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துணை முதல்வரின் இறுதிச்சடங்கு பூரண அரச மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதமும் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் மேற்படி கடிதத்துக்கு […]

இந்தியா

விமான விபத்து குறித்து சந்தேகம்: விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி!

  • January 28, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் Ajit Pawar பயணித்த விமானம் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பில் அரசியல் களத்தில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மேற்படி விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி Mamata Banerjee சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று காலை 8.45 மணி அளவில் விமான […]

இந்தியா

விமான விபத்தில் துணை முதல்வர் பலி: விசாரணை ஆரம்பம்!

  • January 28, 2026
  • 0 Comments

விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் Deputy CM Ajit Pawar உயிரிழந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர Maharashtra மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தெறிந்து. விபத்தில் அஜித் பவார் மற்றும் அவரது மெய் பாதுகாவர்கள் , விமானிகளும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை செய்தி

அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்சவுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரை!

  • January 27, 2026
  • 0 Comments

“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு Shiranthi Rajapaksa உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்றது. இதன்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் FCID பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை […]

இலங்கை செய்தி

ஆளுங்கட்சிக்கு தலையிடியாக மாறிய கொள்கலன்கள்: விசாரணை ஆரம்பம்!

  • January 27, 2026
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கொள்கலன் விடுப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்கான நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கூடியது. குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றன. மூன்று […]

error: Content is protected !!