இலங்கை செய்தி

NPP அரசுக்கு பொன்சேகா பாராட்டு: ஆதரவு வழங்கவும் பச்சைக்கொடி!

  • January 26, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனை பாராட்ட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார். “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு […]

இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

காணி உரிமை வழங்கினால் மலையக மக்களின் தலையெழுத்து மாறும்!

  • January 21, 2026
  • 0 Comments

“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் Jeevan Thondaman தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பெருந்தோட்ட நிறுவனங்களை நம்ப வேண்டாம் என நான் கூறினேன். அவர்களின் சூழ்ச்சி என்னவென்பது எமக்கு தெரியும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு , தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் […]

தமிழ்நாடு

தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆளுநர் வெளிநடப்பு செய்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் சாபக்கேடான அரசியல் முன்னெடுப்பு: தமிழரசுக் கட்சிமீது அமைச்சர் பாய்ச்சல்!

  • January 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். ” முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் […]

இலங்கை செய்தி

போரால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கு வீடு: திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அநுர!

  • January 16, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்

  • January 16, 2026
  • 0 Comments

” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும். எனவே, எமது முதலாவது […]

உலகம்

ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. “ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி […]

இலங்கை செய்தி

அநுர அரசுமீது தமிழர்களுக்கு நம்பிக்கை: ஆஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) உடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது மாகாணத்தின் பொருளாதாரம் குறித்தும் ஆளுநர் தெளிவுபடுத்தினார். ” வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய […]

அரசியல் இலங்கை செய்தி

உயிரைத்தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம்: ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை […]

error: Content is protected !!