உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு: எழுவர் பலி! 82 பேர் மாயம்!!

  • January 24, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் West Java province மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24) சனிக்கிழமை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காணாமல்போயுள்ளவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மழையுடன்கூடிய வானிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஆச்சே Aceh […]

இலங்கை செய்தி

நோயாளர்கள் பரிதவிப்பு: வைத்தியர்களின் போராட்டம் அநீதியானது என்கிறது அரசு!

  • January 23, 2026
  • 0 Comments

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது அல்ல என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று காலை 8 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு வந்த நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். எனினும், […]

இலங்கை செய்தி

ட்ரம்பின் ஈரான்மீதான வர்த்தகப் போரால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுமா?

  • January 20, 2026
  • 0 Comments

ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால Professor Udayanga Hemapala மேற்படி தகவலை வெளியிட்டார் என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “ ஈரானிடம் இருந்து இலங்கை இனி எரிபொருளை வாங்காது. அந்நாட்டிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து இலங்கை […]

இலங்கை செய்தி

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

உயிரைத்தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம்: ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை […]

error: Content is protected !!