இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர இந்தியா செல்ல திட்டம்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி டெல்லி செல்கின்றார். இலங்கை தூதுவர் மகிஷினி கொலன்னே இந்த தகவலை உறுதிப்படுத்தினார் எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாநாட்டில், முன்னணி […]

அரசியல் இலங்கை செய்தி

NPP அரசாங்கத்தை இயக்கும் தனி ஒருவன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் NPP தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டு பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா Tilvin silva தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. JVP தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நான் உத்தியோகப்பூர்வமற்ற […]

இலங்கை செய்தி

தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 3, 2026
  • 0 Comments

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி செவிமடுத்தார். அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார். “ பாடசாலைகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 03 ஆம் திகதி இறுதி முடிவு!

  • January 31, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் Auditor General தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை Constituent Assembly கூடவுள்ளது எனவும் அவர் கூறினார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, […]

செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

ஆஸ்திரேலியா

பெப்ரவரி 08 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணம்!

  • January 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் Isaac Herzog அடுத்த மாதம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கின்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். யூத சமூகத்தை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் சம்பவமானது இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது. […]

இலங்கை செய்தி

பேரிடரால் சேதமடைந்த மதத் தலங்களை மீள கட்யெழுப்பும் திட்டம் ஆரம்பம்!

  • January 27, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) ஆரம்பமானது. கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, […]

அரசியல் இலங்கை செய்தி

சாணக்கியன் இனவாதி: அக்மீமன தேரர் குற்றச்சாட்டு!

  • January 24, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இனவாதியென முத்திரைக் குத்தியுள்ளார் லங்கா மக்கள் கட்சி தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் Akmeemana Dayarathana Thero. கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு முத்திரை குத்தினார். யாழில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு தென்னிலங்கையில் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதியின் மேற்படி உரையை நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று வரவேற்றார். […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியின் உரைக்கு இனவாத முத்திரை குத்தும் விமல்!

  • January 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இனவாதத்தை பரப்புகின்றார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். “ நாட்டில் இன்று இனவாதத்தை பரப்பும் பிரதான நபராக ஜனாதிபதியே இருக்கின்றார். வைராக்கியத்தை விதைக்கவே வடக்கிலுள்ள விகாரைக்கு பௌத்தர்கள் வருகின்றனர் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது வைராக்கியத்தை விதைக்க வருபவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதையே இதன்மூலம் மறைமுகமாக அவர் கூற முற்பட்டுள்ளார் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். எனவே, இனவாதத்தை பரப்புவது யார்? தமிழ் இனவாதியொருவர்கூட […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!

  • January 24, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஆதரிக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் R. Shanakiyan தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் உரையை சிலர் திரிவுப்படுத்தி இனவாதமாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார். “யாழிலுள்ள நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை. வடக்கில் ஒரு விகாரையை […]

error: Content is protected !!