இலங்கையுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் – மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்த சந்தோஷ் ஜா
இயற்கை இடர்கள் காரணமாக இலங்கை மக்கள் சந்தித்துள்ள பெரும் துயரத்தில் பங்கேற்று அவர்களுக்கு உதவிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கு மகாநாயக்க தேரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் […]




