அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

மகனுக்காக பதவி துறந்த அப்பா! சஜித் அணிக்குள் நடப்பது என்ன?

  • January 1, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் நடந்த அரசியல் சமரில் ஆளுங்கட்சி (NPP) வெற்றிபெற்றுள்ள நிலையில், பின்னடைவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்திக்குள் (SJP) உள்ளக மோதல் வெடித்துள்ளது. இதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி சி.வை.பி. ராம் C.Y.P. Raam கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டபோது மேலதிக மூன்று வாக்குகளால் அது […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

அரசியல் இலங்கை செய்தி

தாய் வீடு திரும்புகிறார் சஜித்: சாவிக் கொத்தை கையளிப்பாரா ரணில்?

  • January 1, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஒரு குடையின்கீழ் இருந்த கட்சிதான் தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. எனவே, மீள் இணைவு என்பது கடினமாக இருக்காது. இரு கட்சிகளின் கொள்கைகளும் […]

அரசியல் இலங்கை செய்தி

6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!

  • January 1, 2026
  • 0 Comments

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித் தலைவர்: ரணில் ஆலோசகர்! புதிய யோசனை முன்வைப்பு!!

  • December 31, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி UNP என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando இன்று (31) தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று (30) சந்திப்பு நடைபெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

மண்டியிட்டது கூட்டு எதிரணி: வென்று காட்டியது என்பிபி!

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (31) நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதீடுமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக […]

அரசியல் இலங்கை செய்தி

காலி மாநகர சபைக்குள் அடாவடி: ஐந்து அரசியல் வாதிகள் கைது!

  • December 31, 2025
  • 0 Comments

காலி மாநகரசபை அமர்வின்போது அடாவடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எதிரணி உறுப்பினர்கள் ஐவர், பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சபைக்குள் குழப்பம் விளைவித்து, மாநகர சபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசி தாக்குதல் நடத்தி அநாகரீகமாக நடந்துகொண்ட ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவர்களை சட்ட நடவடிக்கையின் நிமித்தம் காலி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் நாளை நடக்கப்போவது என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

“கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை (31) நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நாளை (31) மீண்டும் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். “ கொழும்பு மாநகரசபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம்தான் நாளை மீண்டும் முன்வைக்கப்படுகின்றது. வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் […]

error: Content is protected !!