அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?

  • December 11, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். “ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் கூறினார். எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார். அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் […]

அரசியல் இலங்கை

நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

  • December 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணியவேண்டிய நிலை (சிறை தண்டனை) ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ மண்சரிவு அனர்த்தம் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால் படிப்படியாக நீரை திறந்திருந்தால் பாரிய வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பொறுப்பு கூறவேண்டும். பன்னலயில் முதியவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இப்படியான துயர் சம்பவங்கள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

  • December 6, 2025
  • 0 Comments

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், குறைநிரப்பு பிரேரணைக்கு […]

அரசியல் இலங்கை

பிரபாகரன் உலகத் தலைவர்: இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்! 

  • November 26, 2025
  • 0 Comments

“ ஈழத் தமிழர்களினது மட்டும் அல்ல, உலகத் தமிழர்களினதும் தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ தேசியத் தலைவர் அவர்களுடைய போராட்டத்தை 2009 இற்கு முதலும் அதற்கு பிறகும் மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புகளில் ஜே.வி.பி. பிரதான இடத்தை வகிக்கின்றது. மஹிந்த […]

அரசியல் இலங்கை

இலங்கை மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை!

  • November 26, 2025
  • 0 Comments

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை […]

அரசியல் இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன். […]

அரசியல் இலங்கை

இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு! 

  • November 12, 2025
  • 0 Comments

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார். “ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார். இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், […]

இலங்கை

அரச வாகனம் வேண்டும்: சாமர எம்.பி. அடம்பிடிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுமானால் அதனை நிராகரிக்கப்போவதில்லை – என்று சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார். “ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.” எனவும் சாமர சம்பத் எம்.பி. குறிப்பிட்டார். அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். […]

இலங்கை

பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை! 

  • November 12, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!

  • November 8, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும். அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய […]

error: Content is protected !!