இலங்கை செய்தி

இலங்கையை மீட்டெழுக்க அனைத்து இனங்களும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது!

  • December 25, 2025
  • 0 Comments

“இலங்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கின்றோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி வருமாறு, “டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் குறித்து ஐ.நா.மகிழ்ச்சி!

  • December 22, 2025
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயல்பட்டதற்கு இதன்போது ஐ.நா. பிரதிநிதி பாராட்டு தெரிவித்தார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

துப்பாக்கிகளை மீளப்பெறுகிறது ஆஸ்திரேலியா! தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

  • December 19, 2025
  • 0 Comments

துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று (19) இந்த தகவலை வெளியிட்டார். சிட்னி, போண்டியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூத சமூகம் உட்பட நாட்டில் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கமைய துப்பாக்கிச்சட்டங்களும் கடுமையாக்கப்படவுள்ளன. இதற்குரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேசிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே […]

அரசியல் இலங்கை செய்தி

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு: அடுத்து என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது. குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் […]

செய்தி

அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது. அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு: வெளியானது அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை […]

ஐரோப்பா

பிரான்ஸில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்- பற்றி எரிந்த வேன்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர்  இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]

error: Content is protected !!