அரசியல் இலங்கை செய்தி

இன்னும் பாடம் கற்காத இலங்கை! ஜெய்சங்கரிடம் சஜித் கூறியது என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

“ சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, டித்வா சூறாவளியில் (ditwa cyclone) அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (Dr. S. Jaishankar) நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் வலியுறுத்து!

  • December 22, 2025
  • 0 Comments

” தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்று (22) விசேட கூற்றொன்றை விடுத்தே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு, “குமட்டல், வாந்தி மற்றும் தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று […]

அரசியல் இலங்கை செய்தி

2033 வரை அவகாசம் வேண்டும்: ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தில் மாற்றம் கோருகிறார் சஜித்!

  • December 22, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மாவனல்லை, அரநாயக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் 2028 முதல் கடன் மீள செலுத்தப்படும் என […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டை மீட்க முழு ஆதரவு: அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி!

  • December 20, 2025
  • 0 Comments

“ டித்வா சூறாவளியை சாதாரணமான விடயமாகக் கருதக்கூடாது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) வலியுறுத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தவேளையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “ பொறுப்பற்ற – கேலிக்கையான பார்வைகளால் தான், சுனாமியிலிருந்து கூட எம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்றளவிலும் “ டாப்ளர் […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்!

  • December 20, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். புதிய அரசமைப்பு ஊடாக அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கேள்விகளை எழுப்பி இருந்தார். மேற்படி கேள்விகளுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று பதில்களை வழங்கினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, “ புதிய அரசமைப்பு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில் வேண்டும்: அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! சஜித் அணி நேசக்கரம்!!

  • December 19, 2025
  • 0 Comments

“ ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். அவர் பதவி விலக வேண்டியதில்லை. அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர். அவர் பதவி […]

அரசியல் இலங்கை செய்தி

வைத்தியர் பெல்லன பணி நீக்கம்: சபையில் சஜித் கொந்தளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு, “புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம். ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இந்த அறிவிப்பை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவி உள்ளிட்ட விடயங்களுக்காக அவசர நிதியாக 500 பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்பு பிரேரணை சபையில் இன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே அதற்கு ஆதரவளிக்கப்படும் என சஜித் கூறினார். அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது. இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்துக்கு தனி அமைச்சு கோருகிறார் சஜித்!

  • December 16, 2025
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தனியானதொரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்ககூடிய வகையில் எமது நாட்டில் நேர்த்தியான பொறிமுறையொன்று எமது நாட்டில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். எனவே, மீண்டுமொரு பேரிடர் ஏற்படுவதற்கு முன்னர் […]

error: Content is protected !!