அரசியல் இலங்கை செய்தி

சிறிதரன் எம்.பியை கைது செய்யவேண்டாமென அரச உயர்மட்டத்திலிருந்து உத்தரவு?

  • December 23, 2025
  • 0 Comments

“யாழ் தையிட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (sivagnanam shritharan) கைது செய்யப்படதாது ஏன்?” அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் இன்று (23) கேள்வி எழுப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்ட பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. இதன்போது தையிட்டியில் நடந்த போராட்டம் தொடர்பிலும் […]

இலங்கை செய்தி

வெள்ள அனர்த்தம்: சிலாபம் வைத்தியசாலையில் 1,200 மில்லியன் ரூபா இழப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வினை மேற்கொண்டார். வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட வைத்தியசாலையில் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. “ இரு முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போதுள்ள வளாகத்தை விட உயர் தரத்தில் வைத்தியசாலை கட்டப்படும்.” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது உறுதியளித்தார். வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், […]

இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்ய நிதி உதவி!

  • December 11, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். “பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். இந்நடவடிக்கைக்கு உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு […]

அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசை கைவிட்டனரா புலம்பெயர் தமிழர்கள்?

  • November 26, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததாலேயே ஆளுங்கட்சியான ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கிய அந்த குழு தற்போது விலகிச் சென்றது ஏன் எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும்,  இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். […]

error: Content is protected !!