நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி இலங்கை வந்தடைந்தார்!
‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13 ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவரை நாட்டிற்கு அழைத்துவரும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 182 […]