வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை […]




