சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?
இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் […]




