சர்வதேச உதவிகள் முறையாக பங்கீடு: தேரர் பாராட்டு!
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன. சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின்போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல் வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டனர் தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டனர். இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல்போனது.எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. […]




