இந்தியாவின் தலைநகரில் சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள்!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் (Delhi) தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, டெல்லியில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) இன்று காலை 10 மணி நிலவரப்படி 359 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பவானாவில் (Bawana) காலை 10 மணி நிலவரப்படி AQI 432 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் (Jahangirpuri) 405 ஆகவும், […]