அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி!
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும். மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து […]





