அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி
கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது அந்நாட்டு கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Marco Rubio கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.




