இந்தியா

17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் Emmanuel Macron மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார். டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு AI உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார். இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் […]

இலங்கை செய்தி

NPP அரசின் வேலைத்திட்டத்துக்கு போரா சமூகம் பாராட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப்புக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் , இலங்கையின் […]

அரசியல் இலங்கை செய்தி

“உள்வீட்டுப் பிரச்சினை மிகக்கேவலமாக உள்ளது”

  • February 9, 2026
  • 0 Comments

“தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siritharan தெரிவித்தார். “நாடாளுமன்றக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக்கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “ எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள். என்.பி.பி.மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை. எமது கட்சிமீது […]

இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை: பின்னணி என்ன?

  • January 7, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாட்கள் பயணமாகவே அவர் கொழும்பு வருகின்றார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி அநுரரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை -சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன […]

அரசியல் இலங்கை செய்தி

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை: சஜித் சுட்டிக்காட்டு!

  • December 24, 2025
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார். ஹெம்மாத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ […]

ஆஸ்திரேலியா உலகம்

சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

ஆஸ்திரேலியா செய்தி

பசுபிக் பிராந்திய பாதுகாப்பு: ஆஸ்திரேலியா புது வியூகம்!

  • December 13, 2025
  • 0 Comments

பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடலுக்கடியில் மூன்று கேபிள் இணைப்புத் திட்டங்களை கூகுள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்குரிய நிதி உதவியை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. மேற்படி கேபிள் திட்டமானது பப்புவா நியூ கினியாவின் டிஜிட்டல் துறையில் புரட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பப்புவா நியூ கினியா உட்பட பசுபிக் பிராந்தியத்தில் தனத செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு சீனா தீவிர் காட்டிவருகின்றது. பப்புவா நியூ […]

ஆஸ்திரேலியா இலங்கை செய்தி விளையாட்டு

U-19 ஆஸி அணியில் இரு இலங்கை வீரர்கள்!

  • December 12, 2025
  • 0 Comments

2026 இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐசிசி உலகிக் கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணி விபரத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். நாதன் குரே, நிதேஸ் சாமுவேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நியூ சவூத் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்தியா மற்றும் சீனா வம்சாவளி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண தொடர் நமீபியா மற்றும் சிம்பாப்வே […]

error: Content is protected !!