இலங்கை செய்தி

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

  • January 21, 2026
  • 0 Comments

டித்வா ditwah புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது. அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. […]

இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் அந்நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு கூடுகின்றது. ஜனவரி 23 ஆம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறும் சபை அமர்வுகளின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும். அத்துடன், இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிரணி சபாநாயகரிடம் கையளிக்கக்கூடும் என தெரியவருகின்றது. அதேவேளை, டித்வா புயல் விவகாரம் பற்றி விசாரிப்பதற்காக விசேட […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!

  • January 16, 2026
  • 0 Comments

டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற […]

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?

  • January 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. “ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 20 ஆம் திகதியே கையளிப்பு: தாமதிக்கப்படுவது ஏன்?

  • January 11, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டிருந்தது. இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு SJP தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, […]

அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமாரை உடன் இடைநிறுத்துங்கள்: அர்ச்சுனா முறைப்பாடு!

  • January 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு gajendrakumar Ponnambalam எதிராக சபாநாயகரிடம் இன்று (7) முறைப்பாடு செய்துள்ளார் அர்ச்சுனா எம்.பி. Archuna. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சுனா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு எவரும் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். நிலைமை இவ்வாறு இருக்கையில் எதற்காக அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது என்ற […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பொலிஸ் அராஜகமா? சபையில் சிறிதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்!

  • January 6, 2026
  • 0 Comments

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் Ramalingam Chandrasekhar , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் S. Siridharan இடையில் சபையில் Parliament இன்று சொற்போர் மூண்டது. நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுவதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை அதற்கு உதாரணம் காட்டினார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் NPP அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார். இதற்கு தனது உரையின்போது அமைச்சர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார். “ வடக்கில் […]

error: Content is protected !!