இலங்கை செய்தி

புதுடெல்லி பறந்தார் ஜே.வி.பி. செயலாளர்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா tilvin silva தலைமையிலான குழுவினர் இன்று (05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரிலேயே அவர்கள் புதுடெல்லி நோக்கி பயணமானார்கள். இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று, முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் சந்திப்பு நடத்தவுள்னர். இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களுக்கு கண்காணிப்பு பயணமும் மேற்கொள்ளவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், இளங்குமரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

புலிகள் அன்று வன்னியில் செய்ததை இன்று தெற்கில் செய்ய முற்படுகிறது ஜே.வி.பி.: சம்பிக்க குற்றச்சாட்டு

  • January 24, 2026
  • 0 Comments

“வன்னியில் புலிகள் அமைப்பு அன்று செய்ததுபோல இங்கு ஜே.வி.பி. JVP பொலிஸ், ஜே.வி.பி. இராணுவம், ஜே.வி.பி. நீதிமன்றம் என்பவற்றை உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க Champika Ranawaka குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சட்டமா அதிபர்கள் சிலர் கடந்த காலங்களில் பக்கச்சார்பாக செயல்பட்ட நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய சட்டமா அதிபர் சட்டத்தின் பிரகாரம் செயல்படுகின்றார். தனிக்கட்சி அரசொன்றை நோக்கியே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. தமக்கே உரித்தான […]

அரசியல் செய்தி

வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் […]

இலங்கை

மாகாண சபை முறைக்கு அஸ்தமனம் – ஜே.வி.பி புதிய வியூகம்

  • November 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபை முறைமையைப் பதிலீடு செய்யும் பிறிதொரு முறைமை தொடர்பாக ஆலோசித்து வருகின்றது என்றும், இந்தியாவுக்குச் செல்லவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் அங்கு கலந்துரையாடுவார் என்றும் தெரியவருகிறது. மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த வாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் […]

error: Content is protected !!