உலகம் செய்தி

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் நாளை பேச்சு!

  • February 5, 2026
  • 0 Comments

ஈரான் Iran மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு சக்தி தொடர்பான பேச்சு நாளை (06) வெள்ளிக்கிழமை ஓமானில் Oman நடைபெறவுள்ளது. இரு நாடுகளும் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி […]

இலங்கை செய்தி

தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 3, 2026
  • 0 Comments

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி செவிமடுத்தார். அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார். “ பாடசாலைகளில் […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநர், படை தளபதி ஆராய்வு!

  • February 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி […]

இந்தியா செய்தி

கர்நாடகா முதல்வருடன் நாமல் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கர்நாடகா Karnataka மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பெங்களூரிலுள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று (28) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரை சந்தித்தது மகிழ்ச்சி. இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து […]

செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 27, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியா–இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இராஜதந்திர வெற்றியோடு நாடு திரும்பினார் பிரதமர்!

  • January 23, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இன்று (23) பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் […]

இலங்கை செய்தி

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா நேசக்கரம்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். மேற்படி ஒப்பந்தத்தின் பிகாரம் இலங்கையின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் […]

இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவருடன் பிரதமர் பேச்சு!

  • January 21, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டாவுடன் (Masato Kanda) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, பேரிடரின் பின்னரான மீள் கட்டமைப்பு பணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. அதேவேளை, […]

error: Content is protected !!