இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார், வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் […]

இந்தியா

முழு அரச மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தீயுடன் சங்கமம்!

  • January 29, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் […]

உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு: எழுவர் பலி! 82 பேர் மாயம்!!

  • January 24, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் West Java province மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24) சனிக்கிழமை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காணாமல்போயுள்ளவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மழையுடன்கூடிய வானிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஆச்சே Aceh […]

ஆஸ்திரேலியா செய்தி

கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பற்றி எரியும் விக்டோரியா!

  • January 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெப்ப அலை மற்றும் கடும் காற்றால் இன்று (09) காட்டு தீ வேகமாக பரவக்கூடும் என்பதால் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கு மத்தியில் இரு மூவர் காணாமல்போயுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், […]

இந்தியா செய்தி

உயிரிழந்த யாசகரின் பையில் லட்சக்கணக்கில் பணம்!

  • January 8, 2026
  • 0 Comments

இந்தியா, கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்த அனில் கிஷோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இரவோடு இரவாக வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார். மறுநாள் காலை அவர் வீதியோரம் உயிரிழந்து கிடந்தார். அவரது உடைமைகளை பொலிஸார் பரிசோதித்தனர். அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. சரும் மூடு பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் […]

இலங்கை செய்தி

வீட்டை கொளுத்திய தந்தை: 13 வயது மகள் பலி! மேலும் நால்வருக்கு எரிகாயம்!

  • January 6, 2026
  • 0 Comments

update வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். ……………. முதலாம் இணைப்பு வீட்டை கொளுத்திய நபரும், அவரது 13 வயது மகளும் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நபரின் மனைவி , மாமியார், மகன், மகள் ஆகியோரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை  […]

இலங்கை செய்தி

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி பலி: புத்தாண்டில் சோகம்!

  • January 1, 2026
  • 0 Comments

வாகன பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் வேன் மோதி பலியாகியுள்ளார். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை Ambalangoda நகரிலேயே இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகள் , அம்பலாங்கொடை நகரில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தினர். அவ்வேளையிலேயே இரு அதிகாரிகளையும் மோதி தள்ளிவிட்டு வேனில் சென்றவர்கள், தப்பியோடியுள்ளனர். அம்பாந்தோட்டை பகுதியை நோக்கியே குறித்த […]

error: Content is protected !!