கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சுரேஷ் அணியும் ஆதரவு!
கிவுல் ஓயா Kivul Oya project திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh Premachandran வெளியிட்டுள்ளார். “கிவுல் ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும். இதற்கு அரசு செலவு செய்ய […]




