அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றில் நாமலை கிழித்து தொங்கவிட்ட பெண் எம்.பி.!

  • February 6, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சமீது Namal Rajapaksa , நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியான   லக்மாலி lakmali hemachandra இனவாத அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் எனவும் அவர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு, “ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார். தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளை ஒழிப்பதற்கான போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல – நாமல்!

  • February 6, 2026
  • 0 Comments

“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போர் இடம்பெற்றது. எனவே, புலிகள் அமைப்பை தோற்கடித்தமை இனவாதம் கிடையாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். ” படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்தது தொடர்பில் சுதந்திர தின நிகழ்வில் பெருமையாகக் கூறப்படவில்லை. அதைவிடுத்து டித்வா புயல் பற்றியே வர்ணனை வழங்கப்பட்டது. சில நாடுகளில் முதலாம் உலகம்போரில் கிடைத்த வெற்றி தொடர்பில்கூட இன்றளவிலும் பேசப்படுகின்றது.” […]

இலங்கை செய்தி

இனவாதம், அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

” இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.”” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க President Anura Kumara Dissanayake தெரிவித்தார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது. சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். “இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எல்லா வளங்கள் இருந்தாலும் மனித […]

அரசியல் இலங்கை செய்தி

இனவாத அரசியல் குறித்து பொன்சேகா எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.இது தொடர்பில் மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ பௌத்த மதமே இந்நாட்டில் பிரதான மதம் என்ற கருத்தில் மாற்று கருத்து கிடையாது. நானும் சிங்கள பௌத்தன்தான்.பௌத்த மதத்தை பாதுகாத்து வந்துள்ளோம். எனினும், சில அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமது நலனுக்காகவே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள், மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!

  • January 24, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஆதரிக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் R. Shanakiyan தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் உரையை சிலர் திரிவுப்படுத்தி இனவாதமாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார். “யாழிலுள்ள நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை. வடக்கில் ஒரு விகாரையை […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி சபதம்!

  • January 16, 2026
  • 0 Comments

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். “ போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை. போர் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே, போரால் இடம்பெயர்ந்த […]

error: Content is protected !!