அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றில் நாமலை கிழித்து தொங்கவிட்ட பெண் எம்.பி.!

  • February 6, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சமீது Namal Rajapaksa , நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியான   லக்மாலி lakmali hemachandra இனவாத அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் எனவும் அவர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு, “ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார். தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள்: மஹிந்த அணி போர்க்கொடி!

  • February 5, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த Indika Anuruddha இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார். “ ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும் FCID , நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் CID ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர். ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், நாமல் சங்கமம்? மொட்டு கட்சி மறுப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் UNP ஒன்றிணையவுள்ளன என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP நிராகரித்துள்ளது. கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இரு தரப்பு இணைவு தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் Sagara Kariyawasam கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன. […]

அரசியல் இலங்கை செய்தி

“மோசடிகளை திசை திருப்பவே ராஜபக்ச குடும்பம் இலக்கு வைப்பு”

  • January 31, 2026
  • 0 Comments

“ எனது குடும்பத்தை இலக்கு வைத்து தனது ஆட்சியில் அரங்கேறும் மோசடிகளை திசை திருப்பலாம் என NPP அரசாங்கம் கருதுமானால் அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (31) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுச்சி பெற்றது. அடுத்த தேர்தல்களிலும் நிச்சயம் […]

அரசியல் இலங்கை செய்தி

Systems change நாசமாகிவிட்டது: சாடுகிறார் நாமல்!

  • January 30, 2026
  • 0 Comments

“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம். இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன். மக்களுக்கு வழங்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

முக்கிய துறைகளில் அரசியல் தலையீடு: நாமல் குற்றச்சாட்டு!

  • January 29, 2026
  • 0 Comments

பொலிஸாருக்கு அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், நீதித்துறையிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது தேவைக்கேற்ப பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன செயல்பட வேண்டும் என அரசாங்கம் நினைத்துக்கொண்டிருப்பது தவறு எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். “ யதார்த்தம் என்னவென்பத புரிந்து அரசாங்கம் செயல்பட வேண்டும். தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

நவ லிபரல் கொள்கையை கைவிடுமாறு ஐ.தே.கவுக்கு மொட்டு கட்சி ஆலோசனை!

  • January 26, 2026
  • 0 Comments

“நவ லிபரல் கொள்கையை Neoliberalism ஐக்கிய தேசியக் கட்சி UNP கைவிட்டால் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தேசியத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாகும். ஒற்றையாட்சி உட்பட தேசியத்துவத்தை முன்னிலைப்படுத்தியே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. எனவே, எமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

தாய்வீடு திரும்பிவிட்டேன்: மொட்டு கட்சியுடன் இணைந்த ரமேஷ் பத்திரன பெருமிதம்!

  • January 24, 2026
  • 0 Comments

“ தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.” – என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன Ramesh Pathirana தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை. சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் […]

இலங்கை செய்தி

ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!

  • January 22, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa  தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது. இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் செயல்படாதீர்: NPP அரசுக்கு எச்சரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் செயல்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது இந்நாட்டின் உரிமையாளர் அல்லர். இந்நாட்டை நிர்வாகிப்பதற்குரிய பொறுப்பு மாத்திரமே அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டுக்குரிய அடையாளம் […]

error: Content is protected !!