அரசியல் இலங்கை செய்தி

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிப்பு?

  • January 9, 2026
  • 0 Comments

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath திட்டவட்டமாக அறிவித்தார். தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தில் பிரதமராக செயல்படும் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya வசமே கல்வி அமைச்சும் இருக்கின்றது. இந்நிலையில் தரம் 6 ஆங்கில பாட புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படவுள்ளது. எனவே, பிரதமர் வசம் இருக்கும் கல்வி அமைச்சு பதவியில் […]

இந்தியா

இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் French ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் Emmanuel Macron அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் S Jaishankar, பிரான்ஸ் ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது தமது இந்திய விஜயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸில் கடந்த வருடம் சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு AI உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார். இம்மாநாட்டின்போது தான் இந்தியா வருவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும். இந்நிலையிலேயே […]

செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாமல் ஆதரவு: மண்கவ்வும் என அரசு அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, குறுகிய அரசியல் […]

செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டார் சஜித்!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கமுறைக்காக அல்ல அவசரகால சட்டம்!

  • January 7, 2026
  • 0 Comments

” அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அச்சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படமாட்டாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ பேரிடரையடுத்து நாட்டில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை. இடைத்தங்கள் முகாம்களில் மக்கள் இருக்கின்றனர். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, அனர்த்த நிலைமையை […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது ஏன்? பிரதமர் விளக்கம்!

  • January 6, 2026
  • 0 Comments

அவசரகால சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Harini Amarasooriya தெரிவித்தார். அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும். இதற்குரிய பணிகளை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்பதற்காகவும், […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலகுவாரா பிரதமர்? வெளியானது அறிவிப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  Dr. Harini Amarasuriya பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர Devananda Suraweera தெரிவித்தார். கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டுக்கு, […]

error: Content is protected !!