அரசியல் இலங்கை செய்தி

தாய்வீடு திரும்பிவிட்டேன்: மொட்டு கட்சியுடன் இணைந்த ரமேஷ் பத்திரன பெருமிதம்!

  • January 24, 2026
  • 0 Comments

“ தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.” – என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன Ramesh Pathirana தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை. சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாமல் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் கையளிக்குமாறு ஆளுங்கட்சி, எதிரணிக்கு சவால் விடுத்துவருகின்றது. எனினும், இது விடயத்தில் எதிரணிக்குள் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. […]

இலங்கை செய்தி

ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!

  • January 22, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa  தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது. இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

  • January 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார். 1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

அரசியல் இலங்கை செய்தி

2029 இல் பொது வேட்பாளர் நாமல் ராஜபக்ச?

  • January 12, 2026
  • 0 Comments

“2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார் “ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா? அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு […]

அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

  • January 5, 2026
  • 0 Comments

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ்,பிள்ளையானுக்காக நாமல் களத்தில்!

  • January 5, 2026
  • 0 Comments

“புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றம் வந்து, வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். எனினும், புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே பிள்ளையானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜனநாயக […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் “சலூன் கதவை” மூடிய நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

“எனது தந்தையின் காலத்தில் இருந்த சலூன் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது. இனி கொள்கையுடன் ஒத்துப்போகின்றவர்களுக்கு மாத்திரமே கட்சி கதவு திறக்கப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாற்று கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குள் வளைத்துபோடப்பட்டனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் ரீதியில் கோலோச்சியது. மறுபுறத்தில் இது தொடர்பில் விமர்சனங்களும் எழுந்தன. கட்சி தாவும் அரசியல் கலாசாரத்துக்கு மஹிந்த களம் அமைத்துவிட்டார் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?

  • January 2, 2026
  • 0 Comments

“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம். கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் […]

error: Content is protected !!