அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 20 ஆம் திகதியே கையளிப்பு: தாமதிக்கப்படுவது ஏன்?

  • January 11, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டிருந்தது. இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு SJP தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று வாக்குகளை வழங்கும் மொட்டு கட்சி!

  • January 9, 2026
  • 0 Comments

“ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ நம்பிக்கையில்லாப் […]

அரசியல் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும். இந்நிலையிலேயே […]

செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாமல் ஆதரவு: மண்கவ்வும் என அரசு அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, குறுகிய அரசியல் […]

செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டார் சஜித்!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள ஆங்கில பாடம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

  • January 6, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று (05) கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தரம் ஆறு […]

error: Content is protected !!