அநுர பிறந்த மண்ணிலேயே அரசியல் பலத்தை காட்டிவிட்டோம்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி!
“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி எமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கூட்டத்தை ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே (தம்புத்தேகம) நடத்தி காட்டினோம். இக்கூட்டத்தை நடத்துவதற்கு பல தடைகள் […]





