இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை: தீர்வுக்கு நிபுணர்கள் அடங்கிய பொறிமுறை!

  • January 21, 2026
  • 0 Comments

” கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் .” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம், கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (FUTA) […]

அரசியல் இலங்கை செய்தி

சிங்கள, பௌத்த வாக்குகளாலேயே அநுர பதவிக்கு வந்தார்: மார்தட்டிக்கொள்கிறது மஹிந்த அணி!

  • January 21, 2026
  • 0 Comments

சிங்கள, பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அவர்களை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயல்படக்கூடாது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வி அடைந்தார். நாடு முழுதும் 42 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றது. இதில் பெரும்பாலான விகிதம் சிங்கள, பௌத்த […]

இலங்கை செய்தி

டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • January 19, 2026
  • 0 Comments

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஆராயப்பட்டுள்ளது. இங்கு, நாணயத்தாள் அற்ற பொருளாதார (Cashless Economy) ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, அரச நிறுவனங்களை டிஜிட்டல் […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது […]

அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

  • January 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார். 1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி சபதம்!

  • January 16, 2026
  • 0 Comments

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். “ போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை. போர் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே, போரால் இடம்பெயர்ந்த […]

இலங்கை செய்தி

பொங்கல் விழாவில் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

  • January 15, 2026
  • 0 Comments

  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் […]

செய்தி

தமிழர் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கு வரவேற்பு!

  • January 15, 2026
  • 0 Comments

வடமாகாண ‘பொங்கல் விழா’ இன்று யாழ். வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வரவேற்புரை நிகழ்த்திய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டின் தலைவர் எம்முடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவது எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது என குறிப்பிட்டார். சாதாரண மக்களின் வலிகளை […]

இலங்கை செய்தி

ஒரு நாடாக மீண்டெழுவோம்: தைத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

” எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு தேசமாக மீண்டெழுவதற்கு ஒன்றிணைவோம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்பின் அவசியத்துவம் ஏற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக அவர்கள் கூறியுள்ளனர். தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய […]

error: Content is protected !!