இலங்கை

இலங்கை கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – ஒருவர் பலி, இருவர் கைது

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தனிப்பட்ட தகராறு வாய்த்தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதாக கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இருபாலை மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!