சுவிட்சர்லாந்தில் தீவிபத்தை ஏற்படுத்தும் மெழுகுவர்த்திகளுக்கு தடை!
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தை தொடர்ந்து அனைத்து ஸ்பார்க்லர் மெழுகுவர்த்திகளும் (sparkler candles) தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா மேயர் நிக்கோலஸ் ஃபெராட் ( Nicolas Feraud) மேற்படி தகவலை வெளியிட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2020 – 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் மதுபான விடுதிகளில் தீவிபத்து தொடர்பில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இனி ஒவ்வொரு வருடமும் தீவிபத்து ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





