உலகம்

தேவாலயத்திகுள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு… 15 பேர் உயிரிழந்த சோகம்!

ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புர்கினா பாஸோ நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. 2022ல் அந்நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக் குழுக்கள் உருவாகி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் அந்நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கடந்த 18 மாதங்களில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

புர்கினா பாஸோ ராணுவம்

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று எசக்கானே என்ற கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை அக்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களிலும் 3 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. புர்கினா பாஸோ மட்டுமின்றி அருகிலுள்ள நாடுகளான மாலி மற்றும் நைஜர் நாடுகளிலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் உள்ளூர் கிளர்ச்சியாளர் குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!