இலங்கை செய்தி

வவுனியாவில் 300போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘Pregabalin’ என்ற 300 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் விற்பனைக்காக மாத்திரைகளை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள SLNS பாண்டுகாபயவின் கடற்படை வீரர்களால் பொலிஸ் STF – மதுகந்தவின் ஒருங்கிணைப்புடன் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கோவில்குளம் சந்தியில் தேடியபோது, ‘பிரீகபலின்’ எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளின் 300 மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 300 ‘Pregabalin’ மாத்திரைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!