ஐரோப்பா செய்தி

பிரித்தானியா பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை – பிரதமர் அதிரடி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ளார்.

பிரதமர் சுனக் X வலைத்தளத்தில் வீடியோ செய்தியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மேல்நிலைப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொலைபேசியால் சீர்குலைந்ததாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தங்கள் வளாகங்களில் கையடக்க தொலைபேசிகளை தடை செய்த பாடசாலைகள் ‘சிறந்த கற்றல்’ சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

இங்கிலாந்தில் அரசாங்க வழிகாட்டுதலின் கீழ், இடைவேளை நேரங்கள் உட்பட பாடசாலைகளில் நாள் முழுவதும் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!