போர் காரணமாக கோடை விடுமுறை பயணிகள் இடமாற்றம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பயணிகள் கோடை விடுமுறைக்காக பாதுகாப்பான, எளிதில் சென்றடையக்கூடிய இடங்களைத் தெரிவு செய்வதாக ஐரோப்பாவின் மிகப்பெரிய விடுமுறை நிறுவனம் டுய் (TUI) தெரிவித்துள்ளது.
முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்குச் செல்ல திட்டமிட்ட பயணிகள், தற்போது சைப்ரஸ் (Cyprus), துருக்கி (Turkey), கிரீஸ் (Greece), இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain) மங்ஞம் மால்டா (Malta) போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக கூறப்படுகிறது.
டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளையும் பயணிகள் அதிகமாக விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயண நிறுவனங்கள் எதிர்பார்க்கும் புதிய கோரிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





