இலங்கை செய்தி

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற டீசல்

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (எல்ஐஓசி) ஆடர் செய்த எரிபொருள் கப்பலில் இருந்த 11,000 மெட்ரிக் தொன் டீசல் தரமற்றது என ஆய்வக சோதனைகள் உறுதி செய்துள்ளன.

தரமற்ற டீசலை இறக்குவது இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய பங்கு சேமிப்பு முனைய நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க தெரிவித்தார்.

இரண்டாவது ஆய்வக சோதனையில் 8,400 மெற்றிக் தொன் டீசல் தரநிலையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த டீசல் மட்டுமே கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 5ஆம் திகதி எம்.டி. ஃபோஸ் பவர் என்ற கப்பல், பெற்றோல் மற்றும் டீசலை ஏற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!