இலங்கை

ஆபாச படங்கள், வீடியோவை வெளியிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், அனுமதியின்றி அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய உத்தேச சட்டமூலம் தொடர்பான குறிப்பாணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட, நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த உறவு முறிந்த பின்னர் சிக்கலை ஏற்படுத்துவதற்காக வேறு நபர்கள் பார்வையிடும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதேநேரம் இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் சிக்கும் நபருக்கு தண்டனை மற்றும் அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content