ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை உலுக்கும் புயல் : ஒருவர் உயிரிழப்பு!
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் லியோனார்டோ (Leonardo) புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் 60 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
மேலும் ஸ்பெயினின் அண்டலூசியாவில் (Andalusia) 3,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவசர சேவைகள் மற்றும் இராணுவ வீரர்கள் உதவிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
போர்ச்சுகல் தனது எச்சரிக்கை அளவை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது, அதிகரித்து வரும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க ஆயுதப்படைகள் படகுகளுடன் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





