இலங்கை

பொலிஸ் சார்ஜன்ட் தலையில் மீது கல் வீச்சு தாக்குதல்: சந்தேகநபர் கைது

தெமட்டகொட பகுதியில் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சமரஜீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சார்ஜண்டை காயப்படுத்திய போதைப்பொருள் வியாபாரி மாளிகாவத்தே அசிதவிடம் இருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 11,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 42 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்