மோதலை தணிப்பதே சிறந்த தீர்வு – பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்
மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் போர் நீடித்தால் பொருளாதார தாக்கங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் எந்தளவுக்கு உதவிகளை வழங்கும் என பிபிசியின் அரசியல் ஆய்வாளர் கிறிஸ் மேசன் (Chris Mason) எழுப்பிய கேள்விக்கே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
மக்களை கருத்திற்கொண்டே எரிசக்தி கட்டண வரம்பு போன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பிரமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரமர்
எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும் போரின் தீவிரத்தை குறைத்து மோதலைத் தணிப்பதே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க மிகவும் எளியதும் பயனுள்ளதுமான வழி என பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தினார்.





